cinema

img

உலகம் பார்த்த சினிமா “சனங்க என்ன ஆனாலென்ன, அண்ணாச்சி! நம்ப சனநாயகம் வாழ்ந்தாப் போதும், அண்ணாச்சி!”

நாயாட்டு (Nayattu)  (மலையாளம்) (2021) (நெட்ஃப்ளிக்ஸ்)
தேர்தல் வெற்றிக்காகச் சாதி அரசியலைப் பயன்படுத்தும் பாசிச அரசியலைப் பேசும் படம்தான் “நாயாட்டு”.சட்டம் ஒழுங்கைப் பேணவுள்ள காவல் துறையை ஆளுங்கட்சி தனது குண்டர்படையாக வைத்து,அராஜகம் செய்வதைஅழுத்தமான கதையம்சத்துடன்சொல்கிற படம் இது. பிரவோம் காவல்நிலைய சார் ஆய்வாளர் மணியன்.இதே காவல்நிலையத்தில் சுனிதாவும் பிரவீனும் காவலர்களாகப் பணியில் சேர்கிறார்கள்.சுனிதாவும் மணியனும் தலித் வகுப்பினர். வீட்டுமனைப் பிரச்னையில்சுனிதா தன் உறவினர்கள் மீதுபிரவோம் காவல்நிலையத்தில்புகார் செய்கிறாள்.உறவினர்க்குஆதரவாக தலித் இளைஞர்கள்ஜெயன் தலைமையில்               கின்றனர்.இவர்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்கள்.அப்போது, காவல் நிலையச் சுவரில் இளைஞர்களில் ஒருவன் பான்பராக் மென்று எச்சில் துப்ப,ஆய்வாளர் மணியனுடன் பிரச்னை ஏற்படுகிறது.பின்னர் எச்சில் துப்பிய முரட்டு இளைஞனுக்கும் காவலர் பிரவீனுக்குமான அடிதடிமோதலால் பிரச்னை மேலும் கடுமையாகிறது. மாலையில், ஆய்வாளர் மணியன் ஜீப்பில் பிரவீன் மற்றும் சுனிதா ஆகியோருடன் வருகையில் எதிர்பாராவிதமாக இளைஞர் கூட்டத் தலைவனும்,ஆளும்கட்சி இளைஞர் அணியைச் சேர்ந்த ஜெயன் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி, அவன்  மரணம் அடைகிறான். தகவலறிந்து இளைஞர் கூட்டம் துரத்த,காவலர்கள் மூவரும் தப்பிக்க ஓடுகிறார்கள்.இந்த நிகழ்வு பற்றிய செய்தி பரவ,மாநிலமெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இடைத்தேர்தல் நெருங்கிய நிலையில் பாதிப்பை உணர்ந்தஆளும் கட்சி மேற்கொள்ளும்தந்திர உத்தி,கேடுகெட்ட வாக்கு வங்கி அரசியலை அம்மணப் படுத்துகிறது. சக காவலர்களைக் காப்பாற்றத் தூக்கில் தொங்கிய ஆய்வாளர் மணியன்,டிஜிபியின் முறையற்ற ஆணையை நிராகரிக்கும் எஸ்.பி,ஆகியோர்,இந்த அராஜக ஆட்சி அமைப்பின் பாவைக் கூத்துப்பொம்மைகளே என்பதையும்படம் தெளிவுபடுத்துகிறது. திரைப்படத்தின் இறுதியில்பார்வையற்ற முதியவளுக்கு உதவியாக வருபவன் அவளது விரல்மீது தன் விரலை வைத்துவாக்குப்பெட்டிப் பொத்தானில் அழுத்துவான்.பீப் என்ற ஒலியுடன் படம் நிறைவடைகிறது.இந்தக் காட்சி ஒரு அருமையான படிமம். கேடுகெட்ட அரசியல்வாதிகளைகுருட்டுத்தனமாக நம்பி நிற்கும்மக்களை மேற்கண்ட காட்சி சித்தரிக்கிறது. காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் படம் தொய்வின்றி வேகமாகச் செல்கிறது.இதற்கு நிச்சயம் இயக்குநர் மார்டின் பிரக்காட்டைப் பாராட்டியே ஆகவேண்டும்.இவர் ஏற்கனவே ஏபிசிடி, சார்லி போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த சிறந்த மலையாளப்பட  இயக்குநர். மணியன் பாத்திரமாக ஜோஜீ ஜார்ஜ்,பிரவினாக குஞ்சக்கோ போபன்,சுனிதாவாக நிமிஷா சஜயன் ஆகிய மூவரும் கதையோடு வாழ்ந்ததாகக் தான் சொல்ல வேண்டும்.அந்தளவுக்கு பாத்திரமாக மாறியுள்ளனர்.மூவருமே இன்றைய கேரள சினிமா என்ற  கிரீடத்தில் ஜொலிக்கும் வைரங்கள்.    

ஜாபர் இடுக்கி முதல்வர் ஆகவும், யாமா ஜில்காமேஷ்  எஸ்பி ஆகவும்,சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.விஷ்ணுவிஜய் இசையமைத்துள்ளார்.குறிப்பாக எச்சில் துப்பி வம்பிழுக்கும் பாத்திரத்தில் நடிக்கும் அந்த இளைஞனின்  நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும்.கவனத்தை ஈர்த்த துடிப்பான நடிப்பு.    தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிப்பது;ஆட்சியை தக்கவைக்க நிர்வாக அமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது. இதுவே உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசுகளின் எழுதப்படாத விதி.மக்களின் விழிப்பே,மக்களுக்கான நிர்வாக அமைப்பை உருவாக்குவதோடு மாற்றத்தையும் உருவாக்கும்.